சொல்லின் பொருள், இடம், நிலைமை என அனைத்துமறிந்து,
சொல்லும் வகையறிந்து அதனடிப்படையில்
சொற்களை வகுத்துப் பகுத்து, கூறும் முறைக்கே வேறுவேறு பேர் வைக்கும்
சொல்வளம் நிறைந்தது நம்மொழி.
சொல்லும் வகைகள்:
-
அசத்தல் = அசை பிரித்துச் சொல்லுதல்
-
அறைதல் = உரக்கச் சொல்லுதல்
-
இசைத்தல் = கோவைபடச் சொல்லுதல்
-
இயம்புதல் = இயவொலியுடன் சொல்லுதல்
-
உரைத்தல் = செய்யுட்கு உரை சொல்லுதல்
-
உளறுதல் = அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச் சொல்லுதல்
-
என்னுதல் = ஒரு செய்தியைக் சொல்லுதல்
-
ஓதுதல் = காதில் மெல்லச் சொல்லுதல்
-
கரைதல் = அழுது அல்லது அழைத்துச் சொல்லுதல்
-
கழறுதல் = கடிந்து சொல்லுதல்
-
கிளத்தல் = ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்
-
குயிற்றுதல் = குயிற்குரலிற் சொல்லுதல்
-
குழறுதல் = நாத்தடுமாறிச் சொல்லுதல்
-
கூறுதல் = கூறுபடுத்துச் சொல்லுதல்
-
கொஞ்சுதல் = செல்லப்பிள்ளைபோற் சொல்லுதல்
-
சாற்றுதல் = அரசனாணையைக் குடிகளுக்கறிவித்தில் (proclamation)
-
செப்புதல் = வினாவிற்கு விடை சொல்லுதல்
-
சொல்லுதல் = இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்
-
நவிலுதல் = பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்
-
நுதலுதல் = ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
-
நுவலுதல் = நூலைக் கற்பித்தல்
-
நொடித்தல் = கதை சொல்லுதல்
-
பகர்தல் = பகிர்ந்து விலை கூறுதல்
-
பலுக்குதல் = உச்சரித்தல்
-
பறைதல் = ஒன்றைத் தெரிவித்தல்
-
பன்னுதல் = நுட்பமாய் விவரித்துச் சொல்லுதல்
-
பிதற்றுதல் = பித்தனைப் போலப் பேசுதல்
-
புகலுதல் = ஒன்றை விரும்பிச் சொல்லுதல்
-
புலம்புதல் = தனிமையாய்ப் பேசுதல்
-
பேசுதல் = உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்
-
மாறுதல் = மாறிச் சொல்லுதல்
-
மிழற்றுதல் = கிளிக்குரலிற் சொல்லுதல்
-
மொழிதல் = சொற்றிருத்தமாகப் பேசுதல்
-
வலித்தல் = வற்புறுத்திச் சொல்லுதல்
-
விள்ளுதல் = வெளிவிட்டுச் சொல்லுதல்
-
விளம்புதல் = பலர்க் கறிவித்தல்
-
நொடுத்தல் = விலை கூறுதல்
நன்றி:
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - ஞா.தேவநேயப் பாவாணர்
இயக்குநர்
செ.சொ.அ.தி.இயக்ககம்
தரமணி,சென்னை 600113, தமிழ் நாடு